புதன், 20 ஜூன், 2012

இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு.

June 19, 2012 0
இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2004ம் ஆண்டு முதல் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
36 வயதான குறித்த நபருக்கு புகலிடம் வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு வீசா வழங்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளரை காலவரையறையின்றி தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார்.
இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Response »

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?


ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?
லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழச்சியான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு.
இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேற்று மொழி பாடல்களில் ஒன்று இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் தமிழ்க் கலைஞர் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பிரபலமான “பேப்பர் ப்ளேன்ஸ்” (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.
குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல், 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த தகவல் குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாகக் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஆஸ்கார் விருது பெற்ற “ஸ்லம் டாக் மில்லியனேர்” போன்ற படங்களை இயக்கிய டேனி பாய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்.
அவரது மேற்பார்வையில், சுமார் 27 மில்லியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் தமிழ்த் திரை இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய “நான்தான் ஒங்கப்பண்டா” என்ற பாடலும் இடம் பெறுவதாக தகவல் கூறுகின்றன.
கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான ‘ராம் லக்ஷ்மண்’ என்ற படத்தில் வரும் பாடல் இது.
தற்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் நாளிதழ்களில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும்.

Related »

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு புதிய சட்டம்!

, 2012 0
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு புதிய சட்டம்!
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு புள்ளிகளை வழங்கும் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.இந்தப் புதிய சட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தில் முதலாவதாக இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் தொடர்பான மாதிரியொன்று முன்வைக்கப்பட்டு அதனை பொலிஸ் திணைக்களத்தில் காட்சிப்படுத்தி அதன் குறைபாடுகள் தீர்க்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மது போதையில் வாகனங்களைச் செலுத்துவதால் விபத்துகள் இடம்பெறுகின்றன. இது போன்ற குற்றங்களுக்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர்,
புதிய சட்டத்தின் படி 24 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை ஒரு வருட காலத்திற்கு தடை செய்வதற்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாழடைந்த கார்களின் அசத்தல் கலைநயம்

ரொம்மி ஹண் எனும் கலைஞர் ஓருவர் பாழடைந்த கார்களைப் பயன்படுத்தி சற்று வித்தியாசமான முறையில் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.
அதாவது 18 கார்களைப் மூன்றாகப் பிரித்து அவற்றினை ஐந்து மீட்டர்கள் உயரமுடைய நுளைவாயில் போன்ற அமைப்பில் உருவாக்கியுள்ளார். லண்டனின் சவுத் பாங் பகுதியில் படைக்கப்பட்டிருந்த இக்கலைநயமானது அதிகளவான பார்வையாளர்களை தன்பக்கம் ஈர்த்திருந்தது.