திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு! – (படங்கள் இணைப்பு)


மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு! – (படங்கள் இணைப்பு)

மன்னாரில் பெரிய மடுவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரால் வீட்டில் உள்ள உபகரணங்களை தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக் கூடிய தன்னியங்கி இலத்திரனியல் சுற்று ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
மென்பொருள் பொறியியலாளரான தங்கராஜா ஷத்விதன் என்பவரே இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு உள்ளார்.
மிகவும் மலிவாகவும், இலகுவாகவும் கிடைக்கக் கூடிய இலத்திரனியல் பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டு உள்ளது.
இக்கண்டுபிடிப்பை பயன்படுத்தி நிலக் கண்ணிவெடிகளை தூரத்தில் இருந்தவாறே அவதானிக்க கூடிய தொழிநுட்பத்தை எதிர்காலத்தில் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் ஷத்விதன்.
இப்படியாக இன்னும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் வெளிச்சத்துக்கு வெளியே வராமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த நிகழ்வு (Day 09) – (வீடியோ இணைப்பு)

August 2, 2012 0
வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த நிகழ்வு (Day 09) – (வீடியோ இணைப்பு)
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள்.  பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்ணம் செய்ததுடன் பெண்கள் அடிஅழித்தார்கள்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உலகின் பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்கள்

பொதுவாக சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் சமய தலங்கள் பலவிதமான அற்புதங்களுடனும், அழகாகவும் காணப்படும். அவ்வாறு உலகிலேயே அதிக பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்களின் தொகுப்பினைப் படத்தில் காணலாம்.










புதன், 1 ஆகஸ்ட், 2012

லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்

Published:Tuesday, 31 July 2012
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.
தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன்களின் உதவியுடன் தெற்கு முனைக்கு நகர்த்தப்பட்டது.
சுடர்விளக்கின் கொப்பரை, 8.5 மீட்டர் உயரம் கொண்ட ஸ்டீல் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியில் பங்கேற்கும் நாடுகளை குறிக்கும் வகையில் இதில் 204 குழாய்களும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு நாட்டின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களின் முனையில் தாமிரத்தாலான இதழ்களும் இடம் பெற்றுள்ளன.