திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு! – (படங்கள் இணைப்பு)


மன்னார் தமிழ் இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு! – (படங்கள் இணைப்பு)

மன்னாரில் பெரிய மடுவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரால் வீட்டில் உள்ள உபகரணங்களை தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தக் கூடிய தன்னியங்கி இலத்திரனியல் சுற்று ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
மென்பொருள் பொறியியலாளரான தங்கராஜா ஷத்விதன் என்பவரே இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு உள்ளார்.
மிகவும் மலிவாகவும், இலகுவாகவும் கிடைக்கக் கூடிய இலத்திரனியல் பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டு உள்ளது.
இக்கண்டுபிடிப்பை பயன்படுத்தி நிலக் கண்ணிவெடிகளை தூரத்தில் இருந்தவாறே அவதானிக்க கூடிய தொழிநுட்பத்தை எதிர்காலத்தில் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் ஷத்விதன்.
இப்படியாக இன்னும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் வெளிச்சத்துக்கு வெளியே வராமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக