ஞாயிறு, 29 ஜூலை, 2012

தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை

Published:Sunday, 29 July 2012,
தற்போது வாகனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை கொண்டு இயக்கப்படுகின்றன. இதன் தேவைப்பாடு அதிகரித்து விலையும் கூடி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள்.
இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் என்ஜினீயரான வாகர் அகமது என்பவர் தண்ணீரை எரிபொருளாக வைத்து காரை இயக்கி அரிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த காரின் வெள்ளோட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் முன்னிலையில் இயக்கினார்.
இந்த புதிய தொழில்நுட்பமானது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (டிஸ்டில் வாட்டர்) இருந்து ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து கார் என்ஜின் இயங்குகிறது. 1000 சி.சி. திறன் கொண்ட காரை ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 40 கிலோ மீட்டர் தூரமும், மோட்டார் சைக்கிள்களை 150 கிலோ மீட்டர் தூரமும் இயக்க முடியும் என்றும் வாகர் அகமது கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக