வியாழன், 13 அக்டோபர், 2011

புதிய 20 ரூபாய் நோட்டு வெளியீடு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி புதிய இருபது ரூபாய் நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, “எப்” ஆங்கில எழுத்தை உள்பொதிந்து அச்சடிக்கப்பட்ட புதிய ரூ.20 நோட்டுகளை வெளியிட உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட மகாத்மா காந்தி வரிசை 2005, நோட்டுக்களின் இரண்டு இடங்களில் உள்ள எண்கள் வரிசையில், “எப்” எழுத்து உள்பொதிந்து அச்சடிக்கப்படும்.
இதைத்தவிர இந்த ரூ.20 நோட்டுக்களில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முன் வெளியிடப்பட்ட ரூ.20 நோட்டுக்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று சென்னை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் ஜி.பி.போரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக