திங்கள், 17 அக்டோபர், 2011

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவை பெற உடனே கையெழுத்து இடுவோம்!

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவை சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டு வந்திருந்தது அனைவரும் அறிந்ததே, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்
http:/ /wh.gov/4oa
என்ற இணைப்பில் ஒக்ரோபர் 29ம் திகதிக்குள் 5000 பேர் கையெழுத்திடுவோமானால் அமெரிக்கா அரசு இது தொடர்பாக ஆவன செய்யத் தயார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் (Sri Lanka Country Specialist, Amnesty International USA) க்கு அறியத் தந்துள்ளது.

எனவே அன்பானவர்களே தயவு செய்து
http:/ /wh.gov/4oa
ல் சென்று முதலில் Create Accountஐ அழுத்தி உங்கள் மின்னஞ்சல், கடவுச்சொல், நீங்கள் வாழும் நகரத்தின் Postleitzahl, (அமெரிக்கர்களுக்கு Zip Code, கனடியர்களுக்கு Postal Code, ஏனைய நாடகளில் வாழ்பவர்களுக்கு நீங்கள் வாழும் இடத்தின் தபாற் குறியீடு ஆகியவை போதுமான விபரங்களாகும். நீங்கள் அமெரிக்காவில் வதியாதவிடத்து நீங்கள் வாழும் மாநிலம் அல்லது மாகாணத்தின் பெயர் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை )ஆகியவற்றைக் கொடுத்தால் உங்களுக்கு வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வரும்.

அதில் தரப்படும் இணைப்பை அழுத்தி, தரப்படும் கடவுச்சொல்லையும் மின்னஞ்சலையும் பாவித்து Sign the petitionஐ அழுத்தினால் போதும்.


நீங்களும் உங்கள் உறவினர், நண்பர்களைக் கெயெழுத்திடச் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக